http://www.inbasutrula.com

News
-Rajya Sabha passes Women's quota Bill
-India decides to formally back Climate Change Accord
-Madras HC declines to postpone IPL-3
-Over 10000 papers received for Tamil Conference
-38 Regions In Tamil Nadu To Get BSNL's 3G Services
-Another Osmania student ends life for Telangana
-Sachin named most influential person in Indian sports
-M.F. Husain applies for overseas citizenship
-Nithyananda to appear in public with a clarification
-Air India likely to incur Rs. 5,400 cr loss in FY'10: Patel
-Sri Lanka reconvenes Parliament to pass Emergency vote
-Govt should have strongly capitalised PSU banks: Montek
-ONGC to invest $5.8 bn in FY11: Oil minister
-DQ Entertainment IPO subscribed 3.5 times on day 2
-Hockey: Germany outclassed New Zealand 5-2 reach semi-finals
-Hockey:Argentina beat Canada 4-2, to play India for 7th place
-Hockey: South Korea stun 3 time champions the Netherlands 2-1
-BCCI president, secretary cancelled bid process - Lalit Modi
-Australia, Canada stay away from Commonwealth Boxing Championships
-Kapil Dev inducted into ICC Hall of Fame
Our Latest Online Publications: Pon Vilangu - Chapter - 63 (Naa.Parthasarathy) -- Our CDs : -- -- -- Our Books : -- -- -- Our Websites : www.chennainetwork.com - www.chennailibrary.com - www.samaiyalarai.com - www.tamilthiraiulagam.com - www.inbasutrula.com - www.siruvarulagam.com - www.wowcricket.com - www.indiainfolibrary.com - www.kovainetwork.com - www.madurainetwork.com - www.trichynetwork.com - www.nellainetwork.com - www.salemnetwork.in - www.gowthampathippagam.com



தமிழக சுற்றுலா தலங்கள்



வேடந்தாங்கல்


     தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேடந்தாங்கல் என்ற ஊரில் பறவைகள் நீர் சரணாலயம் அமைந்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திலிருந்து சுமார் 70 தென்மேற்கே உள்ளது. செங்கற்பட்டிலிருந்து 28 கிலோமீட்டர் தென்மேற்கே இது உள்ளது. இந்தச் சரணாலயத்தின் பரப்பு சுமார் 0.3 சதுர கிலோமீட்டர். இதன் பருவ காலம் நவம்பரிலிருந்து பிப்ரவரி வரை ஆகும்.

     1797 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார்.

     மதுராந்தகம் ஏரிக்கு மேற்கே மேல்மருவத்தூருக்கு வடக்கே வந்தவாசிக்குக் கிழக்கே இது உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்புள்ள ஏரியில் அடம்பு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் உயர்ந்து வளரக்கூடியவை அல்ல. படர்ந்து வளரக்கூடியவை. இதனால் இந்த மரங்கள் அந்த ஏரியில் படர்ந்து ஏரி நீருக்கு மேல் ஒரு மேடை அமைந்தது போல் உள்ளன. மழைக்காலத்தில் இந்த ஏரி நீர் நிரம்பி அடிமரங்கள் நீரில் மூழ்கிய நிலையிலிருக்கும். மேல் உள்ள கிளைகள் நீர்மட்டத்துக்கு மேல் மேடை போல் சிறிது உயர்ந்திருக்கும். இதனால் கிளைப்பகுதி குளுகுளுவென்று இருக்கும். நீர்ல் வாழும் மீன்களைச் சாப்பிட்டு வாழும் நீர்ப்பறவைகள் இந்த இடத்தை விரும்பு வருவதற்கு இது முக்கிய காரணமாகும். செப்டம்பர் - அக்டோபரில் பெய்யும் வடகிழக்குப் பருவக்காற்று மழை காரணமாக வேடந்தாங்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி அவற்றில் மீன்கள் தாராளமாக கிடைக்கும்.

     ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு வருகின்றன. கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா, ஆசுத்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்.

     இங்கு வரும் பறவைகளில் நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

     வேடந்தாங்கல் வரும் சுற்றுலா பயணிகள் இப்பறவைகளை கண்டுகளிக்க 'ஆப்சர்வேடரி டவர்ஸ்' (Observatory Towers) என்ற கோபுரங்கள் இந்த ஏரியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏறி அமர்ந்தபடி பறவைகளைக் கண்டு மகிழலாம். ஏரியின் கரைவழியாக உலாவச் செல்லுவதன் மூலமும் கண்டுகளிக்கலாம்.

     இங்கு தங்குவதற்கு பாரஸ்ட் ரெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. பொதுப்பணித்துறை தங்கும் விடுதி கருங்குழி என்ற இடத்தில் உள்ளது.

மேலும் தகவலுக்கு:
வனவிலங்கு பாதுகாவலர்,
டி.எம்.எஸ். வளாகம்,
எண், 256, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 006.


இணைய பக்க முகவரி: http://www.inbasutrula.com/tn/sanctuaries/vedanthangal.html


சுற்றுலா தளங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

எமது வலைதளங்கள்